வாருங்கள் தேடுவோம்... - ஜான்சி
நீதி எங்கே, நீதி எங்கே?
என ஓலமிடும் நேரம்,
உள்ளத்தில்
எழுகின்றது
புதிதாய் ஒரு
சந்தேகம்???
நீதி தேவதை
பெண்ணவள்
என்பதால்
மாபாதகர்
கையில் அகப்பட்டாளோ?
துன்புற்று
எங்கேனும் சிறைப்பட்டாளோ?
உள்ளம்
உடைமை சிதைந்து
அவளும்
காணா இருளில்
வதைப் பட்டாளோ?
உலகத்து மாந்தரே
கூடி வாருங்கள்.
நீதி தேடும் முன்னே
முதலில் நாமோ
நீதி தேவதையை
தேடுவோம்.
{kunena_discuss:779}