(Reading time: 1 minute)

05. எழுந்து வா - ஜான்சி

Don't give up 

இப்படி நிகழ்ந்தால் என்னாவேன்?,
அப்படி ஆனால் ஏதாவேன்?,

சஞ்சலக் கேள்விகள் கொணரும் 
பயமெனும் கொடிய விலங்கு.

சிந்தையைச் சுருக்கி விடும்,
மூளையை மழுங்கடித்து விடும்- இதுவோ,
செயல் பட விடாமல் தடுக்கும்
மனிதனின் 'கை விலங்கு'.

புலப்படாத வழிகள் பல
கண்ணுக்கு புலப்படுமே..

தென்படாத திசைகளிலும்,
தென்றல் வீசிடுமே...

உள்ளம், உணர்வு, சிந்தை 
முடக்கும்
பயத்தை 
உடைத்தெறிந்தே தோழா...

துணிந்தே நீ வாழ
எழுந்து வா, எழுந்து வா.

Poem 04

Poem 06

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.