05. எழுந்து வா - ஜான்சி
இப்படி நிகழ்ந்தால் என்னாவேன்?,
அப்படி ஆனால் ஏதாவேன்?,
சஞ்சலக் கேள்விகள் கொணரும்
பயமெனும் கொடிய விலங்கு.
சிந்தையைச் சுருக்கி விடும்,
மூளையை மழுங்கடித்து விடும்- இதுவோ,
செயல் பட விடாமல் தடுக்கும்
மனிதனின் 'கை விலங்கு'.
புலப்படாத வழிகள் பல
கண்ணுக்கு புலப்படுமே..
தென்படாத திசைகளிலும்,
தென்றல் வீசிடுமே...
உள்ளம், உணர்வு, சிந்தை
முடக்கும்
பயத்தை
உடைத்தெறிந்தே தோழா...
துணிந்தே நீ வாழ
எழுந்து வா, எழுந்து வா.
{kunena_discuss:779}