யாரோ அவன்? - ஜான்சி
வாழ்க்கை என்பவன் சூத்திரதாரியோ?
தினம் ஒரு போராட்டம் மேற்கொள்ளும் போராளியோ?
யார் அவன்?
தன்னைச் சவாலாக எண்ணுவோர்க்கு
முட்டி மோதி வெல்ல வாய்ப்பளிக்கின்றான்.
தன்னை எளிதாக எண்ணுவோரை மட்டும்
வெறி கொண்ட வேங்கையாய்
தரையில் தாழ்த்தி வீழ்த்துகிறான்.
பெருமிதத்தில் களிக்கிறான்.
தன்னைக் குறித்து கனவில் மிதப்போருக்கு
மூச்சு முட்ட துன்பம் தந்து ,
நீ எண்ணியது போல் நானில்லை
எனக் குரூரம் உரைக்கின்றான்.
மொத்தத்தில் பற்பல நேரங்களில்
மகிழ்ந்திடும்,
மலர்ந்திடும்,
உயர்ந்திடும் விதமாய்
உன் நிலைதனை மறந்து
ஏன் கற்பனை வளர்த்தாய்?
ஏன் கனவுகள் கொண்டாய்?
என
மௌனக் கேள்விகள் பலக் கேட்டுச் செல்லும்.
உயிர்தனை கொஞ்ச கொஞ்சமாய் கொல்லும்.
காலன் போலவே இருக்கிறான்.
{kunena_discuss:779}