என்றென்றும் உன்னுடன் - சுஜாதா ரவிராஜ்
உன் கண்களால் என்னை சிறை எடுத்தாய் ,
விடுதலையே வேண்டாம் என்றேன்
உன் வாசத்தில் ஏன் சுயநினைவை இழக்க வைத்தாய் ,
அதிலிருந்து மீள வேண்டாம் என்றேன்
உன் மனதின் அழகால் என்னை கட்டிபோட்டாய்
அவிழ்க்கவே வேண்டாம் என்றேன்
உன் உண்மையான காதலால் என்னை பக்குவ படுத்தினாய்
இப்படியே இருக்க வேண்டும் என்றேன்
வேறென்ன வேண்டும் என்றாய் ?
தோழியாக , தாயாக நானிருக்க வேண்டும் என்றேன்
உன்னுடன் என்றென்றும் ...