காதல் - சுஜாதா ரவிராஜ்
ஏன் சிரிக்கிறாய் என்றேன் ,
நீ என்னுடன் இருக்கையில் என் உதட்டில்
சிரிப்பு மறையாது என்றாய் .
ஏழு பிறப்பு என்ன , நூறு பிறப்பு எடுத்து
உன்னுடன் இருப்பேன் உன் புன்சிரிப்பை சிறைபிடிக்க ..
இதற்க்கு பெயர் தான் காதலா ?
எனில் நான் உன்னை என் வாழ்விலும்
மேலாக காதலிக்கிறேன் ...
கண்ணிமைக்கும் நேரம் எல்லாம்
என் வாழ்வு இருள்வதை உணர்ந்தேன் ,
ஏன் என் கண் இமைக்கும் நொடியில்
உன்னை காண இயலாது என்பதாலா ...
உன்னை காணாத அந்த நொடியில்
என் இதயம் துடிப்பதை கூட மறுப்பது ஏனோ
இதற்கும் பெயர் காதல் என்றால் ,
ஆம் நான் உன்னை இமைக்க மறந்து
காதலிக்கிறேன் ...
உன் கண்ணசைவில் அகிலத்தையே
வெல்ல காத்திருக்கிறேன் ,
உன் விழி பார்த்து என் வழியும் ,
உன் பாதங்களில் என் பாதைகளும் முடிகிறது.
இதை காதல் அன்றி வேறென்ன சொல்வது
ஆம் நான் உன்னை போல் யாரையும் காதலிக்கவில்லை ....
உன்னை போல் யாரும் என்னையும் காதலிக்கவில்லை .