(Reading time: 1 - 2 minutes)

காதல் - சுஜாதா ரவிராஜ்

ஏன் சிரிக்கிறாய் என்றேன் ,

நீ என்னுடன் இருக்கையில் என் உதட்டில்

சிரிப்பு மறையாது என்றாய் .

ஏழு பிறப்பு என்ன , நூறு பிறப்பு எடுத்து

உன்னுடன் இருப்பேன் உன் புன்சிரிப்பை சிறைபிடிக்க ..

இதற்க்கு பெயர் தான் காதலா ?

எனில் நான் உன்னை என் வாழ்விலும்

மேலாக காதலிக்கிறேன் ...

 

கண்ணிமைக்கும் நேரம் எல்லாம்

என் வாழ்வு இருள்வதை உணர்ந்தேன் ,

ஏன் என் கண் இமைக்கும் நொடியில்

உன்னை காண இயலாது என்பதாலா ...

உன்னை காணாத அந்த நொடியில்

என் இதயம் துடிப்பதை கூட மறுப்பது ஏனோ

இதற்கும் பெயர் காதல் என்றால் ,

ஆம் நான் உன்னை இமைக்க மறந்து

காதலிக்கிறேன் ...

 

உன் கண்ணசைவில் அகிலத்தையே

வெல்ல காத்திருக்கிறேன் ,

உன் விழி பார்த்து என் வழியும் ,

உன் பாதங்களில் என் பாதைகளும் முடிகிறது.

இதை காதல் அன்றி வேறென்ன சொல்வது

ஆம் நான் உன்னை போல் யாரையும் காதலிக்கவில்லை ....

உன்னை போல் யாரும் என்னையும் காதலிக்கவில்லை .

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.