கவிதை - அக்கறை தேவையில்லை - தாரணி
பல கனவுகளுடன்
பல வண்ணங்களுடன்
மாலை வாங்கினேன் நான் -
மணவாளனின் கையில்
மணக்கோலத்தில் மகிழ்ச்சியில் ;
நாட்கள் கடந்தன
சந்தோச சாரலாய்
மழை கண்ட
மயில் போல்
வாழ்க்கையை வாழ்ந்தேன் -
மாதங்கள் கடந்தன
மங்கை என்னை
கேள்வி கணைகள்
மழையென தாக்கி
மனதை துளைத்தன -
மனதில் ரணங்கள்
புதிதாய் மீண்டும்
புது புது பெயரில்
உருவாகி தொடர்கிறது...
நானும் பெண்ணே
ஆசைகள் பல
நானும் கொண்டேன் .
உயிர் என்னுள் வளர
சூரியனுக்கு ஏங்கும்
செந்தாமரை போல்
நானும் காத்து கிடந்தேன்
உணர்வுகள் உள்ள
கனவுகள் உள்ள
உயிர் உள்ள
நானும் ஓர் பெண்-
உங்கள் கேள்விகள்
உயிர்வரை சென்று
வலிகள் விதைத்து
நிராசை விருச்சம்
கண்ணீரில் வளர்கிறது .
பிஞ்சு ஸ்பரிசத்தை உணர
என்னோடு சேர்த்தனைக்க
மடி மீதும் தோள் மீதும்
விளையாடி கலைத்திட
கனா கண்டேன் நான் .
தொட்டில் விலக்கி
தூங்கும் கவிதையை
ரசித்து சிரிக்க
கனா கண்டேன் நான் .
எனக்கும் --
உணர்வுகள் உண்டு
கனவுகள் உண்டு
ஆசைகள் உண்டு
வருத்தங்கள் உண்டு ;
உங்கள் கேள்வியில்
உயிர்வரை வலித்து
அனுதினமும் கூறுபோடும்
உங்கள் அக்கறை
தேவையில்லை -
{kunena_discuss:779}