காத்திருக்கிறேன் - தாரணி
வீட்டு முற்றத்தில்
வீதி மேல்
விழி வைத்து
மனம் வலிக்க காத்திருக்கிறேன் -
காலங்கள் கரைந்து
காடு செல்லும் முன்
கால் கடுக்க காத்திருக்கிறேன் -
நரை ஓடி
கண் புரையோடி
நாட்கள் நகர
நம்பிக்கையோடு காத்திருக்கிறேன் -
மடி மீது
தோள் மீது
விளையாடிய வழித்தோன்றல்
எனை தேடி
என்றேனும் வருவானென்று ..............
{kunena_discuss:779}