(Reading time: 1 minute)

நீயும் நானும் - விஷ்ணு பிரதீப்

நான் பார்க்கும் போது...நீ பார்த்தால்.. 
கவிதையை உணர்கிறேன் காதலே ...!!(ஆண்) 

உன்னை என் கண்ணோடு அணைத்து 
கொள்கிறேன் ..சொட்டாத கண்ணீராக ..!!(பெண்) 

உன்னுடன் பேச விழைகிறேன் அழகே , 
விரலோடு விரலாகவா ?? ...இல்லை 
இதழோடு இதழாகவா ?? (ஆண்) 

இதமாக என்றால் விரல்களோடு .. 
இன்பமாக என்றால் இதழ்களோடு.. 
காதலின் உலகில் மொழிகள் பல.. !!(பெண்) 

வெள்ளை வேட்டிக்கும் சரிகைச் 
சேலைக்கும் போட்ட முடிச்சு தான் 
நம் காதலின் அடையலாமா???(ஆண்) 

இரண்டொரு ஆண்டுகள் பொறு ..என் கணவா.. 
உன்னை பெற்றெடுத்து தருகிறேன் .. 
என் பிள்ளையாக ..!!!!!(பெண்)

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.