(Reading time: 1 - 2 minutes)

காதலியின் கண்கள் - விஷ்ணு பிரதீப்

பனிபொழியும் உன் கண்கள் ,என் 
அதிகாலைப் பொழுது...சட்டென மாறுகிறது 
அது நான் துயிலெழும் கதிராக ...!!! 

உன் கருப்பு வெள்ளை பூக்களிருந்து ... 
தேன் எடுத்துச் செல்லும் தேனீக்களிடம் 
மறித்துக் கூறுகிறேன்..அது எனக்கு 
சொந்தம் என்று ....!! 

வெளிரும் வைரத்தில் கருப்பு முத்துக்களை 
பதித்து, அதை உன் கண்கள் என்றான் இறைவன் , 
அவனை வியக்கிறேன் ...ஒரு கலா ரசிகனாக ....!!! 

இந்த அபலை ஆணை வதைக்காதே ..என் 
கண்ணே ..உன் இமைவாயில் காவலர்களை 
சற்று அமைதியாய் இருக்கச் சொல்லடி ... 

இமயமும் குனிந்து பார்க்கும் .உன் 
இமைகளை ..சிமிட்ட சிமிட்ட என் மனசுக்குள் 
ஆயிரம் மின்னல் அடிக்குதடி மௌனமாக ..!!! 

காதல் வானத்தில் வரைந்த வைத்த..அந்த 
கருப்பு வானவில்லை ..வருடும் தென்றல் 
காற்றாக வேண்டும் என்று வரம் வேண்டி 
எடுத்த பிறவியடி இது...என்னை 
ஏற்றுக்கொள் காதலியே ..

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.