வறுமையின் விந்தில் - விஷ்ணு பிரதீப்
பூமிப் பந்தின் சுழற்சியில் மாறிக்கொண்டே
இருக்கும் மாற்றங்களுக்கு நடுவே,மாறாமல்
நின்று விட்டான் இந்த வறுமை அரக்கன் ....
' பளிச்' என்ற பட்டாடைகள் உடுத்தி,தரையிலே
பறக்கும் சொகுசு கார்களில் செல்கின்றான் ஒருவன்
அதே சாலையோரம் குப்பைத் தொட்டியை
தடவிக் கொண்டிருக்கிறாள் ஒருத்தி ..!!
அழுக்குப் புடவை உடுத்தியிருந்த அவளின்
அங்கங்கள் அப்பட்டமாக தெரிந்து கொண்டிருக்கிறது...
அவளின் ஆடைகள் அனைத்தும் சாளரமாக
கிழிந்து தொங்குகிறது...!!!!
அங்கே காமன் வந்து பார்த்தால் கூட
பாவம் என்று கண்ணீர் வடிப்பான்
அந்த அழுக்குப் புடவை பெண்ணுக்காக..!!!
மாட மாளிகையில் திருமணம் நடத்தி ,ஆடம்பரக்
கப்பலில் வரவேற்பு நிகழ்ச்சி ,வைக்கிறான்
ஒருத்தன்..பிளாட்பாரத்தில் சாக்கடைக்
கரையோரம் குடும்பம் நடத்துகிறான்...மற்றொருவன் ..!!
பாவம் அவனுக்கு பிறந்த அழகு
குழந்தைகள் அந்த சாக்கடைக் குளத்தில்
காகிதக் கப்பல்கள் விட்டுக் கொண்டிருக்கிறார்கள் ....!!!
பணம் கொழித்துப் போய் ,விபச்சாரம் செய்யும்
வேசி மகள்களை தேடிச்சென்று நோயை
விலைக்கு வாங்கி வாழ்கிறான் ...ஒருவன் ..!!
மற்றொருவன் எந்த தவறும் செய்யாமல்
வறுமை என்னும் வாழ்நாள் வியாதியால்
வாடிக் கொண்டிருக்கிறான் ..!!
இப்படியாக,என் பாரதத்தாயை பற்றிக்கொண்டு
விட்டான் வறுமை அரக்கன் ..என் தாயின் கருவிலே
அவனது கொடிய விந்தினால் விதைக்கிறான்
வாடும் விதைகளை ..!!
என் தாயினைக் கவர்ந்து சென்ற அவனைக்
காணும் போது என் நெஞ்சம் கனலக்
கொதிக்கிறது ......
அவன் விதைகளைச் சிதைத்து ...
மலடனாக்கி ..விதி முடிக்க
முடியவில்லையே என்று ,....!
அவன் ஈமச் சடங்கினை விடுதலைப்
பெற்ற விதைகளின் புன்னகைத் தீயில்
நிகழ்த்த முடியவில்லையே ..என்று ..!!!
{kunena_discuss:779}