(Reading time: 2 - 3 minutes)

சாதியம் - விஷ்ணு பிரதீப்

மனிதகுலம் என்னும் ஆலமரத்தில் விழுந்து 
கிடக்கும் விழுதுகள் சாதியமா??இல்லை அதனைத் 
தாங்கிப் பிடித்திருக்கும் வேர்கள் சாதியமா?? 

சாதியம் விதைக்ககுடாத விஷ விதைகள் 
விதைக்கப்பட்டது நம் தாய் மண்ணில் ...! 
சாதியம் வளர்க்கக்குடாத சீமை கருவேலைகள் .. 
வளர்க்கப் பட்டது நம் தாய் மண்ணில் ..! 

சத்ரியன் அவன் அர்ச்சுணன் வில் எடுத்ததில் 
வியப்பில்லை..அவனை மிஞ்சிய வில்லாளன் 
ஏகலைவன் ..அந்த ஏழையின் கரத்திலிருந்து 
கட்டை விரல் வெட்டப்பட்டது,காரணம் சாதி.!! 

பாரதம் கடந்து பல ஆண்டுகள் பின்னும், 
பல்லாயிரம் எகலைவர்களை ஒடுக்க முயலும் 
சாதியின் குரல்வளையை வீரிய வில் எடுத்து 
சிதைக்க வேண்டாமா .!! 

மேதைகள் பலரை பள்ளிக்கூட வாசலிலும் 
சேர்க்காத சாதி இன்னும் எதற்கு .?உன்னத 
தலைவர்கள் பலரை அதன் கூட்டுகுள் அடக்கி வைத்து 
அவர் புகழ் மங்கச் செய்த சாதி இன்னும் எதற்கு ?? 

கட்டபொம்மன்,வீர மருது,வேலு நாச்சி, 
சிவாஜி,பசும்பொன்,நேதாஜி என பட்டிய 
லிட்டுக் கொண்டு போனால் ஆயிரம் பக்கங்கள் 
எழுதினாலும் அடங்காது ..!! 

சாதியின் பெயரில் வியாபாரம் செய்யும் 
திருமணத் தகவல் மையம் ...சாதிச் 
சான்றிதழ் கொண்டு வந்தால் அட்மிசன் 
என்று சொல்லும் கல்விக்கூடம் ..! 

இதற்கு மேல்,ஒதுக்கீடு முறை என்னும் 
ஓட்டு வங்கியை ஆரம்பித்து,தேர்தலில் 
பிரிவினை வாக்குகளை வேட்டையாட 
துடிக்கும் அரசியல் கட்சிகள் ..!! 

இவைகளை வேரறுக்காமல் சாதி 
மரத்தினை ஒழிக்க மாநாடு போட்டு 
மேடை ஏறி கூவுவதால் ஒன்றும் 
மாறிவிடாது இந்த நாட்டில் ..!! 

எம்மதமும் மட்டுமல்ல எந்த 
சாதியும் வேண்டாம் .!!வேறுபாடுகளை 
தொலைத்து மனிதம் போற்ற 
வாழுவோம் இந்த திருநாட்டில் .!! 

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.