(Reading time: 1 - 2 minutes)

காதலின் பார்வையில் ..!! - விஷ்ணு பிரதீப்

வானம் கண்ணடிக்கும் ...

பூவும் புன்னைகைகும்...

 

காதலின் பாதம் பட்டுச்

சென்ற மண்ணெல்லாம் பொன்னாகும்...

 

வரவு வற்றிப் போனாலும்..

செலவு தித்திக்கும்..

 

கதியற்று கிடந்த தலகாணிக்கு..

ஆயிரம் முத்தம் கிட்டும்..

 

வெயிலில் மழையும் பெய்யும்

வானவில்லும் வாசல் தட்டும்..

 

வாழ்க்கையின் வாசம் புரியும்..

புவியும் உன்னைச் சுற்றும்.

 

காதலின் பார்வையில்..!

 

'அவள்' என்ற சொல்லை எண்ணிலடங்காத

முறை பரிசோதித்து பார்த்தும்.

அவளைத் தவிர அந்த

பேரில் யாரும் இல்லை என்பாய் ..

 

குயில் பாட்டும் ..பூங் குழல்

 இசையும் ...அவள் பேசும்

 போது வெளிப்படும் ..!

 

அவள் விழியில் அசையும்

மொழியினை படித்து படித்து

புலம்புவாய் செம்மொழி பட்டியலில்

இந்த 'மொழி' காணவில்லை என்று..

 

காதலின் பார்வையில்...

 

புத்திசாலியும் பித்தன் ஆகிறான்

பித்தனும் கவி பாடுகிறான் .!

 

சுவாசிக்கும் காற்றில் வாசம்

உணர்வான்..!

 

வயதின் மாற்றத்தில் மாறாமல்

மலர்ந்து விடுமோ இந்த காதல் ..

ஏனெனில் ,

 

காதலின் பார்வையில்...கண்ணாடியும்

கடவுள் தான்...!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.