(Reading time: 1 - 2 minutes)

அவளின் டைரியில்….. மீரா ராம்

14.இது நிர்ணயிக்கப்பட்ட விதியா???

கண்முன்னே நீ இல்லாமல் போய்விடினும்

கனவுக்குள் சஞ்சரித்து வலம் வருவதை நிறுத்தவில்லை…

ஒப்பனைகள் செய்ய விருப்பமில்லை…

நீயே என்னை பார்க்க விரும்பாத போது

மற்றவர்கள் பார்க்கும்படி நான் ஏன் இருக்க வேண்டும்?

தேவையில்லை ஒப்பனை…

என் காதலுக்கு ஆயுட்காலம் உண்டோ???

பிறந்து சில நாளில் மடிந்து போனது கனவா??

என் காதல் உன்னால் மரணித்து விட்டது…

நான் எப்போது சாகப்போகிறேனடா???

உயிரில்லாத உடல் மட்டும் இருந்து என்ன பயன்???

காகம் வந்து உயிரற்ற கூடை கொத்தி தின்பது போல்

உன் நினைவுகள் என்னை உயிரோடு கொத்தி தின்கிறது…

துன்புறுத்துகிறது சிறிதும் மனிதநேயமில்லாமல்…

நான் இல்லாமல் போவதென்றால் உன் நினைவுகளுக்கு

இறக்கை விரிக்காத குறையா???... சொல்…

இன்றே இறந்து விடுகிறேன் உன் நினைவோடு…

என்னை வாழவும் விடாது சாகவும் விடாது…

ஏனடா இப்படி கொடுமைகள் புரிகிறாய்???

உன் மனதில் நான் இல்லை… ஆனால் வேறொருத்தி…

அவள் மனதில் நீ இல்லை… இன்று வரை…

ஆனால் என் மனதில் நீ…

இது நிர்ணயிக்கப்பட்ட விதியா???

Avalin diary'l 13

Avalin diary'l 15

{kunena_discuss:784}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.