அவளின் டைரியில்… மீரா ராம்
15.ஏனடா தயக்கம்???
நெஞ்சுக்குள் உன்னைப் பச்சைக் குத்திக்கொண்டேன்…
நானாய் வலிய வந்து பேசினேன்… உனக்காக உருகினேன்…
உன் ஒரு துளி வார்த்தைக்காக ஏங்கியிருக்கின்றேன்….
பலமுறை என்னை வெறுத்தி ஒதுக்கி நிறுத்தியபோதும்…
துடிக்க துடிக்க என்னை அவமானப்படுத்தியபோதும்…
உன் அன்பை வேண்டியே யாசகம் கேட்டேன் கை ஏந்தி…
கதறியிருக்கிறேன், தவித்திருக்கிறேன் உன்னை எண்ணி…
உன் காதலை தவம் பெற பட்டினியும் கிடந்திருக்கிறேன்…
நான் எது செய்த போதிலும் எனக்கும் கிடைத்ததென்னவோ
உனது அலட்சிய பாவனையும் பாராமுகமும் தான்…
இருந்தும் காலைச் சுற்றும் நாய்க்குட்டியாய் உன்னையே
சுற்றி வருகிறது உடலும் உயிரும் மனதும் நினைவும்…
என் சுயநினைவு இல்லாத நேரத்திலும்
நினைவில் நின்றவன் நீ மட்டுமே…
உன் குரல் மட்டுமே…
பதில் எதிர்பார்த்து காத்துக்கிடக்கிறேன் இன்றும்…
சொல்லடா உயிரே…
நிஜமாக என்னை நேசித்தாயா?... இல்லை
அவளாக என்னைப் பார்த்தாயா?... இல்லை
நேரத்தைப் போக்க என்னுடன் பழகினாயா?... இல்லை
அவளில்லாத நேரத்தில் என்னை பயன்படுத்திக்கொண்டாயா??
ஏதும் சொல்லாமல் இந்த மௌனம் ஏன் கடைப்பிடிக்கிறாய்??
ஒருநாள் ஒரு பொழுது என்னை நேசித்தாயா??
உண்மையை என்னிடம் சொல்ல ஏனடா தயக்கம்???...
{kunena_discuss:784}