(Reading time: 2 - 3 minutes)

அவளின் டைரியில்… மீரா ராம்

17.யாரை உன்னிடத்தில் சேர்க்க இறைவன் விதித்திருக்கிறானோ

விட்டு விட்ட டைரியின் பக்கத்தை மறுபடியும்

நிரப்பிக்கொண்டிருக்கின்றேன் உன்னால்…

உன்னை விட்டு உன் நினைவை விட்டு

என்னால் விலக முடியாது போகிறதே???... ஏன்?...

உன் மனதில் நான் துளி கூட மருந்துக்கும் இல்லையென

தெரிந்த பின்னும் உன் பின்னால் சுற்றும் மனதை என் செய்வேன்???...

அவளையே நினைக்கிறாய் நீ இன்றும்…

உன்னை மட்டுமே நினைக்கின்றேன் நான் என்றும்…

அவளோ உன்னை நினைக்கவில்லை அன்றும் இன்றும்…

இது தான் விதியா?... முக்கோண வாழ்க்கையா?...

எதற்கு இறைவன் சதி செய்கிறான் இப்படி…

நீ விரும்பும் வாழ்க்கையாவது உனக்கு கிடைக்கட்டும்…

மகிழ்ச்சி பொங்க நீ வாழ வேண்டுமென

வேண்டுதல் செய்கிறேன் ஒவ்வொரு நாளும்…

உன் புன்னகை மட்டுமே போதும் நான் உயிர் வாழ…

நீ எங்கிருந்தாலும் என் நினைவுகள் மட்டும்

உன்னைச் சுற்றியே இருக்கும்… உன்னைச் சார்ந்தும் கூட…

கனவிலும் காணக்கிடைக்காத அரிய வைரம் நீயடா…

உன்னை மணமுடிப்பவள் உலகத்தின் அத்தனை

பாக்கியத்தையும் ஒருசேரப் பெற்றவளாயிருப்பாள்…

உன்னைப் போன்ற மணவாளன் யார்க்கு வாய்க்கக்கூடும்???

யாரை உன்னிடத்தில் சேர்க்க இறைவன் விதித்திருக்கிறானோ???...

Avalin diary'l 16

Avalin diary'l 18

{kunena_discuss:784}

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.