(Reading time: 1 - 2 minutes)

அவளின் டைரியில்  --- மீரா ராம்

18.தூங்க முயலப் போகிறேன்

இதய அறையில் உன் பெயர்க்கூச்சல் அதிகமாய்…

வெறுமையில் திளைத்து விரக்தியுடன் புன்னகைத்தேன்…

தனிமைத்தீயில் வெந்து சாம்பலாகும் முன் வந்திடு…

உன் அழகு விழிகளோடு என் விழி கலக்க விடு…

மயிர்க்கூச்சம் ஏற்படுத்தும் தொடுகையை தந்திடு…

விரல் பிடித்து இழுத்து உன் அருகாமையில் நனைத்திடு…

இடை வளைத்து உன் மார்போடு சேர்த்து இறுக்கி அணைத்திடு…

நெற்றியிலும், கன்னங்களிலும் முத்தத்தை வழங்கிடு…

உன் இதழ் என் மேனியில் படும் நேரம்

மின்சாரம் பாய்ந்த உணர்வு என்னுள் கோடி கோடியாய்…

என்னவனே என் காதல் உண்மை…

உன்னை உயிராய் நேசிப்பதும் உண்மை…

மன்னவா… என்னை ஏன் அழ வைக்கிறாய்…

ஒருமுறை என்னிடம் வா… ஒரே ஒரு முறை…

என்னை உனக்கு பிடிக்காமல் இல்லை…

ஆனாலும் வர மறுக்கிறாய்… வலிக்கிறதடா…

தயவுசெய்து என்னை மீட்டுச் செல் இத்துன்பத்திலிருந்து…

கண்கள் குளமாகிறது…

உன்னுடன் இருந்த நினைவுகளை எழுப்பி

அசைபோட்டுக்கொண்டே தூங்க முயலப் போகிறேன்….

Avalin diary'l 17

Avalin diary'l 19

{kunena_discuss:784}

 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.