அவளின் டைரியில் - மீரா ராம்
19.நீயே என் உயிரடா உயிரே
மனதின் பாரம் தாங்காமல் விழிகளில் நீர் சூழ்கிறது…
நான் வெளிவரப்போகிறேன் என எட்டிப் பார்க்கிறது கண்ணீர்…
மின்னலடித்தாற் போல ஒரு உணர்வு எனக்குள்…
கண்ணீர் நீ சிந்தினால் என் ஆயுளின் ஓர் நாள் குறையும்…
இது நீ வருத்தப்பட்டு அழும் ஒவ்வொரு நாளுக்கும் பொருந்தும்…
சொல் இனி அழுவாயா???... அசரீரீயாய் உன் குரல் இன்றும்…
எட்டிப்பார்த்த கண்ணீர் கூட உன் வார்த்தையை எண்ணி
உள்சென்றுவிட்டது, மாயமும் அல்ல, மந்திரமும் அல்ல…
உன் காதல் எனும் சக்தியால் மட்டுமே இது சாத்தியமானது…
ஒவ்வொரு நாளும் உன் விலகலை எண்ணி, பாராமுகத்தை எண்ணி
அழ முயற்சித்து தோற்றுக்கொண்டே போகிறேன்
உன் வார்த்தை சத்தியத்தால்…
இன்றளவும் உன் வார்த்தையை நான் மதிக்கிறேன்…
ஆனால் நீ என்னை துரத்தி துரத்தி விரட்டுகிறாயே…
ஏனடா?... கண்ணா…
உள்ளம் வலிக்கிறதடா என்னவனே…
இருதயம் குருதியில் பெருக்கெடுத்து நனைகிறதடா…
மரணத்தையும் மிஞ்சும் நரக வேதனை உணர்கிறேனடா…
ஓர் நொடி ஆகாது உயிரை விடுவதற்கு…
உயிரில்லாத ஜீவன் கொண்டு உன்னை நினைக்க முடியாதுடா…
ஆதலாலே நீ தரும் வேதனையும், வலியையும் சகித்து
உன்னை நேசித்துக்கொண்டே இருக்கிறேன்…
ஏனென்றால் நீயே என் உயிரடா உயிரே….
{kunena_discuss:784}