அவளின் டைரியில் - மீரா ராம்
20.அப்படி ஒன்று எனக்கு இருக்கிறதா என்ன???
நறுமணங்களின் வாசனை பிடிக்காதவர் எவரும் இலர்…
உன்னை எனக்கு பிடித்ததன் காரணம் நீ நீயாய்
இருப்பதும் நடப்பதும் உன் வாசனையை என்னுள் பரப்பியது…
மது வாடையே ஆகாதவள் அதை அருந்தவே துணிந்தேன் உன்னால்…
உன்னை மறக்கும் வழி தெரியாது அதை நாடினேன்…
ஆனால் விதி என்னை அதை அருந்தவிடவில்லை…
அதற்கு அடிமையானால் எங்கே உன்னிடம் நான்
அடிமைப்பட்டிருக்கும் நிலை அறுந்திடுமோ என்ற நப்பாசை தான்…
கடவுள் அதிலும் மண்ணை அள்ளிப் போட்டாரே…
உன் நினைவுகளை மறக்க ஏதேனும் மருத்துவரிடம் சென்று
நியாபகங்களை அழித்திட முடியுமா என்று
தோழியிடம் விசாரித்தேன்…
அவள் அதற்கு லூசு மாதிரி பேசாதே என்கிறாள்…
இந்நிலையிலும் சிரிப்பு வருகிறது அவளின் பதிலைக்கேட்டு…
லூசாம்… நான் புதிதாய் லூசாவதற்கு என்ன இருக்கிறது???...
என்று உனக்கு என் மனதில் கொடுத்தேனோ
அன்றே நான் உன்னில் பைத்தியமாகிவிட்டேனே…
எல்லாம் மறந்துவிட்டு வருங்காலத்தை நினை என்கிறாள்…
வருங்காலம்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!??????????????????
அப்படி ஒன்று எனக்கு இருக்கிறதா என்ன???...
{kunena_discuss:784}