கரைப்பானோ??? கல்லோ??? – மீரா ராம்
கருங்கல்லும் கரைந்துவிடும்
உண்மைக் காதலில்…
உன் நெஞ்சம் கரையவில்லையே
என் அன்புக் காதலில்…
ஏன்???
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரைந்திடுமாம்…
ஹ்ம்ம்…
எனக்கு உன் உள்ளம் கரைக்க தெரியவில்லையா???
இல்லை… நீ உன் உள்ளம் கரைய அனுமதிக்கவில்லையா???
உண்மை நிலவரம் நான் அறியேன்…
கரைப்பானாக நானிருக்கும்வரை
நீ கல்லாக தான் இருப்பாயோ?...
எனில்
நான் யாரும் அசைத்திட முடியாத
கல்லாக கல்லறையில் சிலையாக
சமைந்து விட்டால்,
நீ கரைப்பானாகிடுவாயா உயிரே???!!!
{kunena_discuss:779}