(Reading time: 1 - 2 minutes)

நானறியாததும் உண்மை… – மீரா ராம்

sad

விட்டுச் சென்ற நியாபகங்கள்

தொட்டுச் செல்லுகையில்

கட்டிப் போட்ட நெஞ்சம்

தடம் புரளுகிறது கண்ணா…

 

வெட்டி போட்ட உறவுகள்

ஒட்டிக் கொள்ளும் முன்னரே

வேரில் வெந்நீர் ஊற்றியதால்

பட்டுப் போனதோ என் காதலும்…

 

கரிசல் காட்டு மண்ணிலும்

சலசலக்கும் அருவிக்கரையிலும்

வண்ணத்துப்பூச்சி சிறகடிக்கும் நந்தவனமாய்

உனைக்கண்டு சுற்றிசுற்றி வந்தேன் ஆசையாய்…

 

வளர்த்தது நான் தான் ஆசையை…

ஏனோ கொளுத்திவிட்டாய் நீ அதனை…

இன்று சாம்பலாக இருப்பதும் நானே…

நீயும் அதனை நீங்கலாக செல்கிறாய்….

 

துடிக்கும் இதயம் தேடுவதும் உண்மை…

வலிக்கும் பிரிவு கசப்பதும் உண்மை….

வெடிக்கும் வார்த்தை மரிப்பதும் உண்மை…

நடிக்கும் மார்க்கம் நானறியாததும் உண்மை…

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.