(Reading time: 2 - 3 minutes)

உதிரா பூக்கள் - ஷக்தி

Uthiraa pookkal

 

தனக்கு மட்டுமே சொந்தம் என 

நினைக்கும் ஒவ்வொரு நொடியும் 

 

உனக்கேன் சொந்தம் என 

கேட்கும் அசரிரீ ஆழ்மனதில்..

 

இதுவரை உணர்ந்திடாத வலியது..

இதுவரை புரிந்திடாத புதிரது.

 

உன்னை என்னில் தொலைத்து 

என் மனம் உன் உரிமை என கொண்டாடி

 

சொல்லில் சுரங்கம் அமைத்தாய் என்னில் நீ,

தொலைந்த உன்னை என்னில் மீட்டெடுக்க... 

 

அத்தனையும் கனவென எண்ணி  

காலம் கடக்க என்னால் முடியும் 

கனவுக்கு முடிவொன்று இருந்திருந்தால்... 

 

பொழுது சிறிதாகினும் முழுதாய் 

நான் இருந்தேன் திமிராய்... 

 

என் திமிரில் குளிர் காய்ந்த 

உன் பொறுமை என் பிடித்தம்

 

என் பொறுமை உன் நினைவில்

நொறுங்கி போன பின்னும் 

உன் நெஞ்சம் உடையாமல் 

உதிர்த்து கொட்ட ஊசலாடும்... 

 

என்னை நானே எதிர்த்து 

சண்டையிடுகிறேன் எனக்குள்ளே... 

 

எண்ணங்கள் பல பல வந்து வந்து 

முறையிடும் என் கண் முன்னே... 

 

நினைவுகள் வெற்றிடம் ஆகும்பொழுது

உனக்கு மட்டும் ஏனோ விதிவிலக்குகள்...

 

நான் அறிந்தேன் ஆழ்மனதில் இத்துயரம்,

உறவுகள் பிறக்கும் முன்னே...

 

உதிர்க்கும் முன்னே உணர்வுகளை 

உள்ளடக்கி உறைய செய்தேன் என்னோடு,

என் பயம், என்னை நான் அறிவேன்...!

 

இது காதல் அல்ல ... இது நட்பும் அல்ல... 

இரண்டிற்கும் அப்பாற்பட்ட உணர்விது... 

 

உன்னை குறை கூறி 

என்னை ஏமாற்ற நான் 

தயார் இல்லை...

 

உன்னோடான என் உணர்வுகள் 

நீ அறியாத உதிரா பூக்களாக 

மணம் கமழும் என்னில் எப்போதும்... 

 

உதிரா பூக்கள் தொடர்ந்து மலரும்... 

மலர்ந்து உதிரும் உன் புன்னகையில்,

என் மகிழ்ச்சி …!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.