கவிதை - நீயும் நானும் - புவனேஸ்வரி கலைசெல்வி
எண்ண அலைவரிசைகளின்
ஏகாந்த நர்த்தனத்தில்
ஏனென்று புரியாமல் சிக்கி கொண்டவர்கள் நாம் !
நினைக்கும்பொழுது பேசும் நீயும்
தவிக்கும்போது துணை நிற்கும் நானும்
காலம் தன் பேனாவினால் தீட்டும்
காவியத்தின் நாயகர்களோ ?
களம் அறியாமல் , நிரல் புரியாமல்
ஒருவரை ஒருவர் நம்பி நடக்கின்றோம் !
வீழுவதென்றால் விழுவோம் ஒரே நிழலாகி
எழுவதென்றால் எழுவோம் ஒரே உயிராகி !
{kunena_discuss:779}