(Reading time: 1 - 2 minutes)

கவிதை - நீயும் நானும்  - புவனேஸ்வரி கலைசெல்வி

together

எண்ண  அலைவரிசைகளின்

ஏகாந்த நர்த்தனத்தில்

ஏனென்று புரியாமல் சிக்கி கொண்டவர்கள் நாம் !

 

நினைக்கும்பொழுது பேசும் நீயும்

தவிக்கும்போது துணை நிற்கும் நானும்

காலம் தன் பேனாவினால் தீட்டும்

காவியத்தின் நாயகர்களோ ?

 

களம்  அறியாமல் , நிரல் புரியாமல்

ஒருவரை ஒருவர் நம்பி நடக்கின்றோம் !

வீழுவதென்றால்  விழுவோம் ஒரே நிழலாகி

எழுவதென்றால் எழுவோம் ஒரே உயிராகி !

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.