(Reading time: 1 - 2 minutes)

கவிதை - நான் வரைந்த ஓவியங்கள்  - புவனேஸ்வரி கலைசெல்வி

Drawing-Kid

வரைய தெரியாத சிறுபிள்ளைபோலவே

அன்பினை தேடி பயணிக்கிறேன் நான் !

 

எத்தனை எத்தனை வண்ணங்கள் ,

அத்தனை அத்தனை  மனிதரின் குணங்கள் !

 

அனைத்தையும் தொட்டு தீட்டும் ஓவியமாய்

அனைத்தையும் அரவணைத்தேன்  நட்பெனும் காவியமாய் !

 

வரைந்து முடித்ததும் சிலவற்றை பாராட்டுகிறார்கள் ,

பலவற்றை கண்டு நகைக்கிறார்கள் !

நான் கண்ட உறவுகளும் அவ்விதமே !

 

எது எப்படி போயினும் ஆண்டுகள் கடந்து

திரும்பி பார்க்கையில் அனைத்து ஓவியங்களுமே

நினைவுகளுடன் மிளிர்கின்றன,

கொஞ்சம் புன்னகையாய் கொஞ்சம் கண்ணீராய் !

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.