கவிதை - நான் வரைந்த ஓவியங்கள் - புவனேஸ்வரி கலைசெல்வி
வரைய தெரியாத சிறுபிள்ளைபோலவே
அன்பினை தேடி பயணிக்கிறேன் நான் !
எத்தனை எத்தனை வண்ணங்கள் ,
அத்தனை அத்தனை மனிதரின் குணங்கள் !
அனைத்தையும் தொட்டு தீட்டும் ஓவியமாய்
அனைத்தையும் அரவணைத்தேன் நட்பெனும் காவியமாய் !
வரைந்து முடித்ததும் சிலவற்றை பாராட்டுகிறார்கள் ,
பலவற்றை கண்டு நகைக்கிறார்கள் !
நான் கண்ட உறவுகளும் அவ்விதமே !
எது எப்படி போயினும் ஆண்டுகள் கடந்து
திரும்பி பார்க்கையில் அனைத்து ஓவியங்களுமே
நினைவுகளுடன் மிளிர்கின்றன,
கொஞ்சம் புன்னகையாய் கொஞ்சம் கண்ணீராய் !
{kunena_discuss:779}