என் இனியவன் அவன் - புவனேஸ்வரி
இவன் எனது நண்பனா ? அல்லது
உள்ளத்தை கொள்ளை அடித்த காதலனா ?
என்னை சிரிக்க வைப்பதும் இவன்தான்
என்னை அழ வைப்பதும் இவன்தான் !
என்னை சிலிர்க்க வைப்பவனும் இவன்தான்
என்னை துயரத்தில் ஆழ்த்துபவனும் இவன்தான் !
என்னை உறங்க வைப்பவனும் இவன்தான்
என் உறக்கத்தை களவாடுபவனும் இவன்தான்!
என் நினைவுகளை மறைக்க வைப்பதும் இவன்தான்
என் நினைவுகளை தூண்டி விடுபவனும் இவன்தான் !
என்னை தனிமையில் நிருத்துபவனும் இவன்தான்
என் தனிமையை துரத்துபவனும் இவன்தான் !
என்னை சிணுங்க வைப்பதும் இவன்தான்
என்னை அள்ளி அணைப்பதும் அவன்தான் !
என்னை ரசிக்க வைப்பதும் இவன்தான்
என்னை விரும்ப வைப்பதும் இவன்தான் !
என்னை கனவில் ஆழ்த்துவதும் இவன்தான்
என்னை இயல்பிற்கு மீட்பவனும் இவன்தான்!
இவனை நினைக்காத நாள் என்பது எனது நாள்காட்டியில் இல்லை
இவனை வெறுத்த நொடி என்பது என் கடிகாரத்தில் இல்லை !
இவனை உணராத நிலை என்பது என் புலன்களுக்கு இல்லை
இவனை விரும்பாத தருணம் என்பது என் இதயத்திற்கு இல்லை !
இவனை யாருடனும் ஒப்பிடுவதே இல்லை
இவன் ஈடுஇணையற்றவன் !
இவனை எதிலும் நிறுத்தி வைப்பதில்லை
இவன் எல்லைகள் இல்லாதவன் !
இவனுக்கு என்றொரு பெயரை சூட்டவில்லை
இவன் அனைத்து அழகிய பெயர்களை விட அழகானவன் !
இவனை காதல் என்று உரைப்பதில்லை
இவன் பிரிவை தராதவன் !
இவனை ஜீவன் என்று சொல்வதில்லை
இவன் மோட்சத்திற்காக புவியை பிரிவதில்லை !
இவனை என்னவன் என்று கட்டுபடுத்தவில்லை
இவன் அனைவருக்கும் அன்பன் !
இவன் சொல்லாத சோகம் இல்லை
இவன் உரைக்காத தத்துவம் இல்லை !
இவன் தராத புத்துணர்ச்சி இல்லை
இவன் தராத மோனம் இல்லை !
இவன் இல்லாத நாடே இல்லை
இவனுடன் இணையாத மொழியே இல்லை !
இவனை வெறுக்கும் உயிரே இல்லை
இவனை நேசிக்காத மனிதனும் இல்லை !
எங்கும் நிறைந்தவன் என்றென்றும் என்னை இயக்குகிறான்
" இசை " எனும் என் இனியவன் அவன் ..!
{kunena_discuss:779}