(Reading time: 2 - 3 minutes)

பிடித்தவளின் வாதம் பிடிவாதமோ? - புவனேஸ்வரி

அதீத அன்புடன் தொடரும் பெண்ணின் நேசத்தை மறுக்க முடியாமல் மனம் விட்டு பேசும் காதலனின் பதிவிது.. அவன் ஒவ்வொரு கேள்விகளுக்கும் உளமார அவள் கூறும் பதிலிது

 

அவன் : எதை கண்டாய் என்னிடம் ? ஏன் இத்தனை நேசம் ?

அவள் : காணமலே உயிர்வரை  நேசிக்க கற்று தந்தாள் அன்னை .. தொடர்கிறேன் அவளது போதனையை !

 

heart அவன் :உன் காதலுக்கு நான் இணையில்லாதவன் !

அவள் :ஆம் , உனது அன்புக்கு ஏது  ஈடு இணை ?

 

அவன் :நீ எதிர்பார்க்கும் வசதியை தரமுடியாமல் போகலாம்

அவள் :நான் கேட்பது எல்லாம் வசதியல்ல , வசந்தத்தை தான் !

 

அவன் :என்னிடம் ஆடம்பர கார் இல்லை

அவள் :வேண்டாம் , நமது இடைவெளியை குறைக்கும் மோட்டார் வண்டியே சொர்க்கம் எனக்கு

 

அவன் :அண்ணார்ந்து பார்க்கும் தொழில் செய்யவில்லை நான்

அவள் :எனினும் தலை நிமிர்ந்து வாழ்வதில் வீரன் நீ

 

அவன் :சொகுசான வீடில்லை எனக்கு , இன்னமும் வரவேற்பறையில் மழைத்துளிகள் சிதறுகின்றன

அவள் :இருக்கட்டும் , நல்லவர் இருக்கும் இடத்தில் மட்டும்தானே மழை அன்னையும் தேடி வருவாள்

 

அவன் :தங்க ஆபரணம் வாங்கி தரும் செல்வமில்லை என்னிடம்

அவள் :உன்னிடம் நான் வேண்டும் ஒரே தங்கம் , திருமாங்கல்யம்

 

அவன் :என்னுடன் வாழ்ந்தால் அதிகம் அழ நேரிடும்

அவள் :இருக்கட்டும் கண்ணீர் துடைக்கத்தான் உன் கைகள் இருக்கின்றனவே

 

அவன் :என் பாதை எங்கு முடியுமோ நான் அறியேன்

அவள் :நான் உனது பாதையாய்  இருப்பதை விட , உனது பாதமாய் இருக்கிறேன் அன்பே

 

அவன் :என்னதான் வேண்டும் உனக்கு ?

அவள் : என்னைத்தான் தர வேண்டும் உன்னிடம் !

  

காதலில் பிடிவாதம் அழகில்லாமல் கூட போகலாம்

ஆனால் பிடிவாதமான காதல் என்றுமே  அழகுதான்!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.