(Reading time: 3 - 5 minutes)

உனக்குள்ளே நான் - புவனேஸ்வரி

என்னவனே , 

உன் விரல் பற்றும் வாய்ப்பு கிடைத்திருந்தால்

சில நொடிகளின் சிலிர்ப்பில்

Manaiviye Magalagidu

என் உணர்வுகள் அடங்கி இருக்கும் !

 

இன்றோ , உன் கைவிரல்கள் எப்படி இருக்கும் என கனவு காணுகிறேன் !

 

எப்படி கரம் பிடிப்பாய் என்னை ?

நீ எனக்கு மட்டுமே உரிமையானவளடி

 என்று உரைக்கும் விதத்தில் அழுத்தமாகவா ?

 

அல்லது

 

என் கரங்களுக்கு வலிக்குமோ

என்று சிந்தித்தவாறு மென்மையாகவா ?

 

நீ என் விழியோடு விழி கலந்திருந்தால் 

நாணத்தை மறைக்க முடியாமல் தலை குனிந்திருப்பேன் !

 

இன்றோ உன் பார்வையின் ரகசியங்களை கற்பனை செய்து கொண்டிருக்கேன் !

 

எப்படி பார்ப்பாய் என்னை ?

எனக்கே தெரியாமல் ஒர பார்வை பார்ப்பாயா ?

 

அல்லது

 

எனது சுவாசத்தை தடுமாற வைப்பதற்காகவே

 இமைக்காமல் பார்ப்பாயா ?

 

உன்னோடு என் பயணத்தை தொடங்கி இருந்திருந்தால்

சில மணி நேரங்களில் நமது பயணம் முடிந்திருக்கும் !

 

இன்றோ கடவு சான்றிதல் இல்லாமலேயே உன்னோடு பல கண்டங்களை தாண்டிவிட்டேன் !

 

முதலில் என்னை எங்கு கூட்டி செல்வாய் ?

நம்ம இணைத்த இறைவனுக்கு நன்றி

 கூறும்படி கோவிலுக்கா ?

 

அல்லது

 

உன்னை எனக்கு தந்த வாழும் தெய்வங்களான

 உன் பெற்றோரை  சந்திக்க உன் வீட்டிற்கா  ?

 

காதலித்து கோபம் கொண்டிருந்தால்

இந்நேரம் உன்னை பிரிந்திருக்கலாம் !

 

ஆனால் இன்றோ நீ எப்படியெல்லாம் கோபப்படுவாய் என்று சிந்திக்கிறேன் ?

 

"போடீ " என்று உரைத்துவிட்டு திரும்பி நின்று கொள்வாயா ?

 

அல்லது

 

உன் ஐவிரல்களும்  என் கன்னத்தில் பதியும் வகையில் அறைந்திருப்பாயா ?

கன்னத்தில் கை வைத்துக்கொண்டே கற்பனை செய்கிறேன் !

 

சந்திக்க தொடங்கியிருந்தால் உன்னுடன் பேசி வைத்து

ஒரே நிறத்தில் உடை அணிந்து ரசித்திருப்பேன்

 

இன்றோ , உனக்கென்ன வண்ணம் பிடிக்கும் ? இன்றென்ன நிறத்தை தேர்ந்தெடுப்பது என்று குழம்பி நிற்கிறேன் !

 

நீ என்ன சொல்வாய் ? தினமும் நமக்கான உடை நிறத்தை தேர்ந்தெடுப்பாயா ?

 

அல்லது

 

இது என்ன சிறுபிள்ளைத்தனம் என்று நகைப்பாயா ?

 

என்னவனே ,

 

உனக்கும் எனைப்போல் காதல் வந்திருந்தால்

இன்னும் சில நாட்கள் மௌனமாகவே இருந்துவிடு

வார்த்தைகளால் கோர்க்காமல்

பார்வையால் அவ்வப்போது பிணைந்து தவிக்கும்

 இந்த ரகசிய காதலும் அழகுதான் ..!

 

உன்னுடன் மட்டும்தான் என்னால்

 இணைந்து வாழ்ந்துவிட முடியுமாடா !

 

அப்படியிருக்கையில் சில நாட்கள்,

உன் மீது கொண்டுள்ள ஒருதலை காதலை சுமக்கும் நாட்களாய் கடக்கட்டுமே !

 

நமக்குள் நடந்திட்டும் கண்ணாமூச்சியில்

நான் உனக்குள் ஒளிந்திருக்கிறேன்

என்பதை உணர்ந்தாலும்

அதை உரைத்துவிடாதே !

 

விதம் விதமாய் கனவு கண்டு

நிதம் நிதமாய் நம்மை உணர்ந்து

இதம் இதமாய்  மலரட்டும்

நிரந்தரமான நம் உறவு!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.