வெறும் கவிதை அல்ல - புவனேஸ்வரி
அன்பே அறிவாயோ நீ
என் எழுதுகோளில் சிந்தும் ஒவ்வொரு
மைத்துளியும் உனது பேர் சொல்லு காவியம் !
அன்பே அறிவாயோ நீ
என் சிந்தையில் உறையும் ஒவ்வொரு
உவமையும் உனது பிம்பம் !
அன்பே அறிவாயோ நீ
என் கவியின் ஒவ்வொரு
பொருளும் உன்மீது கொண்டுள்ள நேசம் !
அன்பே அறிவாயோ நீ
என் காகிதத்தில் தீட்டும் ஒவ்வொரு
வார்த்தைகளும் நான் மௌனமாய் மறைத்த ரகசியம் !
அன்பே அறிவாயோ நீ
நான் வாசித்து காட்டும் ஒவ்வொரு
கவிதையும் உன்னிடம் நான் சொல்லமுடியாமல் துடிக்கும் உணர்வுகள் !
அன்பே அறிவாயோ நீ
நான் வடிக்கும் ஒவ்வொரு
கண்ணீர்த்துளியின் மறுபிறப்பே என் கவிதைகள் !
{kunena_discuss:779}