(Reading time: 1 - 2 minutes)

வெறும் கவிதை அல்ல - புவனேஸ்வரி 

pen

அன்பே அறிவாயோ நீ

என் எழுதுகோளில்  சிந்தும் ஒவ்வொரு

மைத்துளியும் உனது பேர் சொல்லு காவியம் !

 

அன்பே அறிவாயோ நீ

என் சிந்தையில் உறையும் ஒவ்வொரு

 உவமையும் உனது பிம்பம் !

 

அன்பே அறிவாயோ நீ

என் கவியின் ஒவ்வொரு

பொருளும் உன்மீது கொண்டுள்ள நேசம் !

 

அன்பே அறிவாயோ நீ

என் காகிதத்தில் தீட்டும் ஒவ்வொரு

வார்த்தைகளும் நான் மௌனமாய் மறைத்த ரகசியம் !

 

அன்பே அறிவாயோ நீ

நான் வாசித்து காட்டும் ஒவ்வொரு

கவிதையும் உன்னிடம் நான் சொல்லமுடியாமல் துடிக்கும் உணர்வுகள் !

 

அன்பே அறிவாயோ நீ

நான் வடிக்கும் ஒவ்வொரு

கண்ணீர்த்துளியின் மறுபிறப்பே என் கவிதைகள் !

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.