(Reading time: 1 minute)

பிரிவினில் ராதை - புவனேஸ்வரி 

Rathai

இரவெல்லாம் உறவு கொண்டு

பகலெல்லாம் ஏங்க  வைப்பாரடி !

 

உவமையில் கவி சொல்லி

தனியில் நோகவைப்பாரடி !

 

சிரிக்க வைத்து ருசித்திருந்து

அழ வைத்து ரசித்திருப்பாரடி !

 

காதலில் உருகவைத்து

கடமை என்று மறைந்திருவாரடி !

 

பெண்மையை போற்றிவிட்டு

பெண்மனதை ஏய்திருவாரடி  !

 

போ என்று சொன்னால் மட்டும்

பாசாங்கு செய்வாரடி !

 

சொல்லில் ராமனடி

செயலில் வேடமடி  !

 

கொடுப்பது ஏக்கமடி

மறைந்தது தூக்கமடி !

 

வில்லில் வீரமடி

அவனால் கண்ணில் ஈரமடி !

Ratha Krishnan kathal - 09

Ratha Krishnan kathal - 11

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.