பிரிவினில் ராதை - புவனேஸ்வரி
இரவெல்லாம் உறவு கொண்டு
பகலெல்லாம் ஏங்க வைப்பாரடி !
உவமையில் கவி சொல்லி
தனியில் நோகவைப்பாரடி !
சிரிக்க வைத்து ருசித்திருந்து
அழ வைத்து ரசித்திருப்பாரடி !
காதலில் உருகவைத்து
கடமை என்று மறைந்திருவாரடி !
பெண்மையை போற்றிவிட்டு
பெண்மனதை ஏய்திருவாரடி !
போ என்று சொன்னால் மட்டும்
பாசாங்கு செய்வாரடி !
சொல்லில் ராமனடி
செயலில் வேடமடி !
கொடுப்பது ஏக்கமடி
மறைந்தது தூக்கமடி !
வில்லில் வீரமடி
அவனால் கண்ணில் ஈரமடி !
{kunena_discuss:779}