(Reading time: 1 - 2 minutes)

உள்ளம் தொட்ட உத்தமன் - புவனேஸ்வரி 

ullam thotta uthaman

நீ !

 

நிழலுக்கும் நிஜத்திற்கும் உள்ள இடைவெளியில்

நான் கண்டெடுத்த நிரந்தரம் நீ

 

கண்ணீருக்கும் புன்னகைக்கும் உள்ள இடைவெளியில்

நான் உணர்ந்த உணர்வுகள் நீ

 

அமைதிக்கும் அதிரடிக்கும் உள்ள இடைவெளியில்

நான் புரிந்துகொண்ட அர்த்தம் நீ

 

வெள்ளத்திற்கும் வறட்சிக்கும் உள்ள இடைவெளியில்

நான் சந்தித்த ஈரம் நீ

 

உன்னைப்போல் யாரையும் திட்டியதில்லை

உன்னைப்போல் யாரையும் புகழ்ந்ததும் இல்லை

 

உன்னைப்போல் யாரையும் வெறுத்ததும் இல்லை

உன்னைப்போல் யாரையும் நேசித்ததும் இல்லை 

 

உன்னை சீண்டாத நாட்களே இல்லை

உன்னை விட்டுத்தந்த  நாளும் இல்லை

 

 அன்பே , நம்  மகன் கூட உன்னை போல இருக்க வேண்டாம் ..

என் உள்ளம் தொட்ட உத்தமன் என்ற பெயர் உன்னை மட்டுமே சேரட்டும் !

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.