(Reading time: 1 - 2 minutes)

எழுதா மொழிகள் எனது - புவனேஸ்வரி 

Broken Heart

உன் திருமணம் !

அருகினில் நான் இல்லை ..

 

உன் கண்கள் தேடும்

அந்த அழகு பதுமை நான் இல்லை ..

 

அக்கினியின் வேகம் தாங்காமல் கண் கலங்கும் உன்

இருவிழிகளை துடைக்க உன்னருகில் நான் இல்லை ..

 

கள்ளத்தனமாய் உரசும் உன் விரல்களுக்கு

சொந்தமானவள் நான் இல்லை

 

மங்கள நாண்  நீ பூட்ட

இறைவனை வேண்டி கொண்டு தலை குனிவது நான் இல்லை !

 

நேசித்தேன் ..

உன்னை மட்டுமே உலகமாய் நேசித்தேன் ..

 

நேசிக்கிறேன் ..

என்னைவிட்டு நீ வெகு தூரம் சென்றும் ஒவ்வொரு மணித்துளிகளிலும் 

உயிராய் நேசிக்கிறேன் ..

 

 

சொல்லபோவதில்லை ...

உன்னை நேசித்த முதல் தினத்தில் தொடங்கி ,

நீ இன்னொருத்தியின் கணவனாய்  மாறும் இந்த நொடிவரை

என் காதலை நான் சொல்ல போவதில்லை ..

 

சொன்னாலும் உனக்கு புரியப்போவதில்லை ..

என்னுடனேயே அல்லும் பகலும் சுற்றியும் கூட

உனக்காய் நான் சேர்த்த நேசம்

உனக்கு சொன்னாலும் புரியபோவதில்லை ..

 

என் செய்கையை விடவா , வார்த்தைகள் காதலை உணர்த்திவிடும் ?

புரியவில்லை எனக்கு ..!

 

போகட்டும் ..போனால் போகட்டும் ..

என் வாழ்வின் முதல் இழப்பு நீ இல்லை !

 

நான் உனக்காய் எழுதிய கவிதைகளில்

இதுவும் ஒன்றாய் தூங்கட்டும் என் இதயக் கூட்டுக்குள் ..

காதலேனும் காவியத்தில்

எழுதா மொழிகள் எனது !

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.