(Reading time: 1 - 2 minutes)

சங்கத் தமிழ் கவி - புவனேஸ்வரி 

Love

பேச தெரியும் அவளுக்கு ..!

பேச மட்டும் தான் தெரியும் அவளுக்கு ..!

 

துக்கமோ சந்தோஷமோ ,

நாணமோ கோபமோ ,

ஏமாற்றமோ எதிர்பார்போ

எதுவாகினும் அவனிடத்தில் பேச மட்டும் தான் தெரியும் அவளுக்கு ..!

 

அவன் புரிந்து கொண்டாலும்

புரியாமல் போனாலும் ,

அவளை ரசித்தாலும் ,

அவ்வப்போது முறைத்தாலும்

எதுவாகினும் அவனிடத்தில் பேச மட்டும் தான் தெரியும் அவளுக்கு ..!

 

கவிதையோ கதையோ ,

உளறலோ உவமையோ ,

உண்மையோ பொய்யோ

எதுவாகினும் அவனிடத்தில் பேச மட்டும் தான் தெரியும் அவளுக்கு ...!

 

அவன் பேசுவானா ?

ஆம் ,

என்றோ தூறும் மழை போல ,

அவள் நெற்றியில் முட்டி சிரித்து

கள்வனவன் ,அவள் பேசிய

அத்தனை வார்த்தைகளுக்கும் ஈடாய்

சங்கத் தமிழில் கவி வடிப்பான்

"ம்ம்ம்ம் "எனும் ஒரே வார்த்தையால் ..

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.