சங்கத் தமிழ் கவி - புவனேஸ்வரி
பேச தெரியும் அவளுக்கு ..!
பேச மட்டும் தான் தெரியும் அவளுக்கு ..!
துக்கமோ சந்தோஷமோ ,
நாணமோ கோபமோ ,
ஏமாற்றமோ எதிர்பார்போ
எதுவாகினும் அவனிடத்தில் பேச மட்டும் தான் தெரியும் அவளுக்கு ..!
அவன் புரிந்து கொண்டாலும்
புரியாமல் போனாலும் ,
அவளை ரசித்தாலும் ,
அவ்வப்போது முறைத்தாலும்
எதுவாகினும் அவனிடத்தில் பேச மட்டும் தான் தெரியும் அவளுக்கு ..!
கவிதையோ கதையோ ,
உளறலோ உவமையோ ,
உண்மையோ பொய்யோ
எதுவாகினும் அவனிடத்தில் பேச மட்டும் தான் தெரியும் அவளுக்கு ...!
அவன் பேசுவானா ?
ஆம் ,
என்றோ தூறும் மழை போல ,
அவள் நெற்றியில் முட்டி சிரித்து
கள்வனவன் ,அவள் பேசிய
அத்தனை வார்த்தைகளுக்கும் ஈடாய்
சங்கத் தமிழில் கவி வடிப்பான்
"ம்ம்ம்ம் "எனும் ஒரே வார்த்தையால் ..
{kunena_discuss:779}