என் மனம் வென்ற மித்ரன் - புவனேஸ்வரி
அவன்..!
நான் பெற்ற வெற்றிகளை எல்லாம்
தனதாய் எண்ணி களிப்பான்
என் தாயில்லை...
அவன்..!
என் இன்பத் துன்பங்களை
தோள் மீது சுமப்பான்
என் தந்தையுமில்லை
அவன்..!
என் தவறுகளை
முகம் சுளிக்காமல் திருத்துவான்
என் தமையனில்லை
அவன்..!
சேட்டைகளால் உள்ளம்
கவர்ந்து எனை வீழ்த்துவான்
என் தம்பியுமில்லை
அவன்..!
என் பாதையில்
என்றும் அக்கறை கொண்டவன்
வழிப்போக்கனும் இல்லை..
அவன்,
என் அகராதியில் இடம் பெறாத பொருள்
அவன்,
நான் கிறுக்கிய உயிரோவியம்
அவன்,
நான் படித்து முடிக்காத தொடர்கதை
அவன்,
என் பாவங்களின் மன்னிப்பு
அவன்,
என் புண்ணியத்தின் பலன்
அவன்,
என் மனம் வென்ற மித்ரன்
{kunena_discuss:779}