ஹேய் சண்டைக்காரா - புவனேஸ்வரி
சண்டை உன்னுடன்!
அருகில் இருந்திருந்தால் உன்
கன்னத்தை பதம் பார்த்து இருக்கும்
என் ஜவிரல்கள்!
அந்த எண்ணம் வந்ததுமே
என்னை கடிந்து கொண்டேன் நான்!
உன்னை திட்டி தீர்க்கவே
இதயத்தில் இருந்து இதழ்களை அடைந்த
என் வார்த்தைகள் , உன்னை பற்றி
நினைத்ததுமே வெளிவராமல் அவ்விடமே நின்றிருந்தன!
வார்த்தைகள் எல்லாமே
கண்ணீராய் மாறிட
கோபத்தை காட்டினேன் நான்..
உணர்வில், உறவில்
உறக்கத்தில், உணவில் ஆனால்
உன்னிடம் மட்டும் முடியவில்லை
ஏன் என்று புரியவில்லை!
ஆனால் நீ கண்டு பிடித்துவிட்டாய்
என் விரக்தியின் உச்சத்தை..!
மறைத்தாலும் என் நீ கண்டு பிடிப்பாய்..
நீ கண்டு பிடித்ததும் உண்மையிலேயே
மறைகிறது எனது கோபம்..!
உன்னிடம் மட்டும் ஏன் இவ்வளவு பொறுமை?
விசித்திரமான விடையில்லா கேள்வி..
ஒவ்வொரு முறையும் கோபம் தணிந்ததும்
பெருகிக் கொண்டே இருக்கும் அன்பே ,
கேள்வியின் பதிலோ?
சற்று முன் நான் சிரிக்க மறந்தேன்
என்பதை இப்போது மறந்தேன், வாடிடும்
உன் வதனம் கண்டு
இதோ தொடங்கி விட்டேன்
உன்னிதழில் புன்முறுவலை
உருவாக்கும் கலையை ..!
புன்னகைத்தாய்.. பூரித்து போனேன்
தலையாட்டி சிரித்தாய் தவிடுபொடியானேன்..
உன் முகம் காண ஆவல் கொண்டு
என் கைப்பேசியை துளாவினேன்
என்னை மயக்கும் உன் மாசற்ற முகம்..
ஒவ்வொரு சண்டைக்கு பின்னர்
எப்படித்தான் தித்திக்கிறாயோ?
வியக்கிறேன் , ரசிக்கிறேன்
திணறுகிறேன், திளைக்கிறேன்
இதோ ஆயுத்தமாகிவிட்டேன் புன்னகையுடன்
அடுத்த சண்டைக்கு..ஹேய் சண்டைக்காரா
{kunena_discuss:779}