(Reading time: 1 - 2 minutes)

நிறைவேறா வேதங்கள் - புவனேஸ்வரி 

Love

உரிமை இல்லாமல்

ஏன் இணைந்தாய்

ஏன் எனக்குள் நுழைந்தாய்

ஏன் என்னை உன்பால் ஈர்த்தாய்
ஏன் அன்பாய் வென்றாய்

ஏன் என் மனதை உனதாக்கினாய் ?

 

என்ன செய்வேனோ?

நீ என்னவன் இல்லை என்ற உண்மை

அனுதினமும் அறைகிறது கன்னத்தில் ..!

கடிகாரம் கூட நகைக்கிறது, உன்னை

பிரியும் நொடி அருகில் வருகிறதாம்..!

நாள்காட்டியோ எச்சரிக்கிறது

நமது உறவின் கலாவதி நாளை நினைவு படுத்தி..!

 

உன்னை விட்டுகொடுத்து சிரிக்க தியாகியும் இல்லை

உன்னை இழுத்து பிடித்துக் கொள்ள துணிவுமில்லை..

சந்தோஷமான நிறைவுகளை கற்பனையில் வழங்கியவள்,

இன்றும் நிராசையுடன் தீக்குளிக்கிறேன்..

என் வலி என்னோடு போகட்டும்..

 

நீ வாழ் !!

நான் ஆசைப்பட்ட வாழ்வினை

இன்னொருத்தியுடன் வாழ் !!

என்றும் ஆசி வழங்கும் எனது

நிறைவேறா வேதங்கள் ..!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.