உனது பெயர் - புவனேஸ்வரி
உறவில்லாமல் கட்டித் தழுவும்
காற்றும் மலரும் போலவே
நீயும் நானும்!
என்னை உன் ஆளுமையால் நீ சூழ்ந்துகொள்ள
விடுபட எண்ணமே எழாமல் சுழல்கிறேன் உன்னோடு
ஆனால் சூழல் நம்மை சும்மா விடுமா?
இன்று சிரிக்கும் நொடிகள் எல்லாம்
நாளை என் கண்ணீரை தூண்டிவிடும் விஷமாய் மாறும்
என நான் அறிவேன்!
இன்று நாம் பகிரும் வார்த்தையெல்லாம்
நாளை என்னை மௌனமாக்கிவிடும்
என்றும் நான் அறிவேன்!
காலம் உருண்டோடும்
எல்லாம் மாறி விடும் ஒன்றைத்தவிர !
உன் பெயர் ..!
உன் பெயரை கேட்கும்போதெல்லாம்
என் அடிவயிற்றில் சில்லென்ற காற்று சில்மிஷம்காட்டி ஓடிடும்
முகமோ, மின்மினி பூச்சிகளை அடைத்து வைத்த பாட்டில் போல ஒளிரும்
இதழ்களோ கிழக்கில் இருந்து மேற்கு வரை விரியும்
தினம் தினம் மரணிக்கும் என்னை மீட்டெடுத்து
மீண்டும் கொன்றுவிட்டு போகும் உனது பெயர் .!
{kunena_discuss:779}