(Reading time: 1 minute)

நீயே எனது உலகமடா - புவனேஸ்வரி 

Love

நான் தைரியசாலி என்றார்கள்

உன்னை நினைத்துக் கொண்டேன்

உனக்கு மட்டுமே தெரியும்

அச்சங்கள் யாதென

 

நான் அழகி என்றார்கள்

உன்னை நினைத்துக் கொண்டேன்

உனக்கு மட்டுமே தெரியும்

அழகியல் மீது நான் கொண்டுள்ள வெறுப்பு

 

நான் திறமைசாலி என்றார்கள்

உன்னை நினைத்துக் கொண்டேன்

உனக்கு மட்டுமே தெரியும்

நான் வார்த்தைகள் இல்லாமல் திணரும் நொடிகள்

 

நான் புன்னகையுடன் வாழ்பவள் என்றார்கள்

உன்னை நினைத்துக் கொண்டேன்

உனக்கு மட்டுமே தெரியும்

என் கண்ணீரின் ஈரம்

 

என்னை அறியாத இவ்வுலகில் வாழும் என்னவனே

நீயே எனது உலகமடா !

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.