நீயே எனது உலகமடா - புவனேஸ்வரி
நான் தைரியசாலி என்றார்கள்
உன்னை நினைத்துக் கொண்டேன்
உனக்கு மட்டுமே தெரியும்
அச்சங்கள் யாதென
நான் அழகி என்றார்கள்
உன்னை நினைத்துக் கொண்டேன்
உனக்கு மட்டுமே தெரியும்
அழகியல் மீது நான் கொண்டுள்ள வெறுப்பு
நான் திறமைசாலி என்றார்கள்
உன்னை நினைத்துக் கொண்டேன்
உனக்கு மட்டுமே தெரியும்
நான் வார்த்தைகள் இல்லாமல் திணரும் நொடிகள்
நான் புன்னகையுடன் வாழ்பவள் என்றார்கள்
உன்னை நினைத்துக் கொண்டேன்
உனக்கு மட்டுமே தெரியும்
என் கண்ணீரின் ஈரம்
என்னை அறியாத இவ்வுலகில் வாழும் என்னவனே
நீயே எனது உலகமடா !
{kunena_discuss:779}