01. மகளின் டைரி - வானை நோக்கி ஒரு பயணம் – அப்பாவுக்காக - புவனேஸ்வரி
உயிரில்லா சிறுகொடி போல
இலக்கில்லாத பிள்ளை நான்!
கொடியை வான் நோக்கி பறக்க வைக்கும்
தூண்போலவே என் தந்தை !
வானைப் பார்க்கும் ஆசை வந்தது,
தூணின் உதவியில் மேலே சென்றேன்!
விதி சிரித்தது, தூணும் இடிந்தது
கண் இமைக்கும் நொடியில் இரு வழியாய் பிரிந்தது வாழ்க்கை !
ஒன்று, வானை நோக்கி நான் பறந்திட வேண்டும்,
அல்லது, துவண்டு மண்ணில் வீழ்ந்திட வேண்டும் !
பல துயர் தாண்டி துணை நின்ற தூணுக்கு,
என் வீழ்ச்சியை பரிசளிப்பதா?
இல்லை..! இல்லவே இல்லை !
இதோ துணிந்துவிட்டேன் காற்றின் உதவியில்
மீண்டும் வானை நோக்கி பறக்க!
என்னை சுமந்த தூணுக்கு
என்றென்றும் வானோக்கி பறந்து
நன்றி நல்குவேன் !
{kunena_discuss:779}