03. மகளின் டைரி - தேடுகிறேன் தந்தையை - புவனேஸ்வரி
வீட்டு வாசலில்,
நேர்த்தியாய் அடுக்கப்பட்ட காலணிகளில்,
வீட்டினுள்,
காற்றோடு கலந்து ஒலிக்கும் குரல்களில்,
வரவேற்பறையில்,
வீற்றிருக்கும் ஒற்றை சோபாவின் வெற்றிடத்தில்,
சுவற்றில்,
அழகாய் மாட்டிவைத்த புகைப்படங்களில்,
பூஜை அறையில்,
தனக்கென துதி பாடும் பக்தனை தேடும் இறைவன் மத்தியில்,
சமையல் அறையில் ,
காரமான உணவின் கைமணத்தில்,
உணவருந்தும் தட்டில்,
எனக்கென ஊட்டி விடும் கைகளின் ரேகையில்,
என் தந்தையை காணவில்லை !
தந்தையின் அடையாளங்களை காணவில்லை !
அலைப்பேசி எண்ணில்லை,
முகவரியும் நினைவில்லை,
போன பாதை தெரியாது இருப்பினும்
அனுதினமும் தேடுகிறேன் மரண தேவனை
அவனை கண்டால் சொல்லுங்கள்
என் தந்தையை மீட்டு எடுக்க வேண்டும் !
{kunena_discuss:779}