என்ன காதலா? - புவனேஸ்வரி
இயற்கை தரும் இதம்,
இசை தரும் ஆறுதல்,
அன்னை தந்த ஆறுதல் முத்தம்,
தந்தை கொடுக்கும் திருட்டுச் செல்லம்,
அண்ணன் தரும் உரிமை,
தம்பி காட்டிடும் பொறாமை,
நண்பன் பேசியவார்த்தைகளில்
இப்படி நினைத்துப் பார்த்து புன்னகைக்க
ஆயிரம் காரணங்கள் இருந்தாலுமே,
தனியாக புன்னகைப்பவரை பார்த்து,
“என்ன காதலா?” என்று தான் கேட்கிறோம்!
{kunena_discuss:779}