புரிதல் இல்லாதவரை பிரிவு நிரந்தரம் தான்! - புவனேஸ்வரி
மிகவும் பிடித்தது அவளை!
அவள் என்னைப்போல அல்ல!
வார்த்தைகளை விரயம் செய்வதில்லை!
நேர்த்தியால் கீர்த்தியை உயர்த்திக் கொண்டவள்
தனக்கென அடையாளம் கொண்டவள் !
அவளை என்னவளாக்கினேன்
வாழ்க்கை புதிதானது, சில நாளில் புதிரானது !
என்னைப்போல் இல்லாதவளிடம் என்னை தேடினேன்!
ரசித்ததை எல்லாம் தூற்றத் தொடங்கினேன்,
எனக்கவள் சரியில்லையென உதறியும் போனேன்..
நாட்கள் நகர்ந்தன..!
இம்முறை இவளைக் கண்டேன்!
என்னைப்போல் ஒருத்தி !
என் சிந்தனைகளின் நகல் அவள் !
அவள் செயல்கலின் அசல் நான் !
என்னைப் போன்றவளுக்கு என்னை புரியும் என நினைத்தேன்!
அவளும் என்னவளாகினாள் !
நான் சிரிக்கையில் அவளும் சிரித்தாள்!
நான் அழுகையில் அவளும் அழுதாள்!
காலம் கடந்தது, ஒரு நாள் காதலும் கடந்து போனது!
நான் சினம் கொண்டேன், அவளும் சினம் கொண்டாள் !
நான் போய்விடு என்றேன், அவளும் அதையே உரைத்தாள் !
மீண்டும் தனியானேன்..!
தனிமை கற்றுத் தந்த பாடம்,
இதுவரை நான் சந்தித்த ஆசிரியர்கள் கூட
கற்றுத்தராத வேதம்!
எதிர் எதிராய் இருந்தாலும்,
ஒன்றுபோல் தோன்றினாலும்
பிணைப்பு என்பது புரிதலின் மறுஉருவம்!
புரிதல் இல்லாதவரை பிரிவு நிரந்தரம்தான்!
{kunena_discuss:779}