கவிதை - வேலவனே! - புவனேஸ்வரி
திக்கற்றவள் நானென கருதி
திறன் வழங்கிடு வேலவா!
நிற்கதியானவள் இவளென
நிரந்தரமாகிடு ஷண்முகா!
இன்னைகள் அணிவகுக்க,
உன் தோள் சேர்த்து கொள்ளடா இனியவேலா!
கண்கண்டதெல்லாம் கருத்தினை நெறிக்க
கொஞ்சம் கவலை தீரடா கார்த்திகேயா!
சினம் தோன்றி என்னை நானே சிதைக்க
உன்னில் சிறை வையடா சிங்காரவேலா!
முக்திநிலை இன்றி நான் அலைபாய்ந்திட
முன்நின்று கவலை தீரடா ஷக்திவேலா!
குறைகள் என்று சொல்ல நேராத
இன்பம் தந்திட வா குருபரா!
வேல் வேலென துதி பாடிட
எவ்வேளையிலும் துணை நில்லடா திருமுருகா!
{kunena_discuss:779}