(Reading time: 2 - 3 minutes)

என்னை என்ன செய்யப்போகிறாய்..? - தங்கமணி சுவாமினாதன்

மாமா..மாமா..மாமா..எம் மேல-நீயுந்தான்..

இம்புட்டுக் கோவப் படலாமா?

காத்தோட நானுக்கு எங்காதலத்தான்...

Villageதூது விட்டேன்...காத்து வந்து உன்..

காதினிலே.. எங்காதலத்தான் சொல்லிடுச்சா?

காத்து வந்து சொல்லையிலே..நீ ..

காது சுத்திக் கட்டிருக்கும்... முண்டாசுதான்..

காத்தினையே... சொல்லாம தடுத்திடுச்சா?

உன்கோவம் ..நானறிவேன்..உன் ஆசை

எது அறிவேன்..ஆனாலும் என் மாமா...

நாமும்தான்..சிறிது காலம்... காத்திருக்க வேண்டாமா..?

மல்லிப்பூ தோட்டத்துக்கு என்னை வான்னுதான் கூப்புடற...

மல்லிப்பூ பறிக்கையிலே நீ என்னை.. மயக்கித்தான் பறிச்சிடுவ..

கருப்பங் கொல்லைக்கு நீ என்னை.. கஞ்சி கொண்டு வரச்சொல்லுற..

தித்திக்கும் "சாராக"என்னை நீ... புழிஞ்சிதான் எடுத்திடுவ...

சவுக்குத் தோப்புக்கு என்னை நீ.. சாயங்காலம் வரச்சொல்லுற..

சாயங்காலம் நானும் வந்தா..சரசமாட நெனெச்சிடுவ...

நெல்லுக்கதிரறுக்க..என்னைய நீ..வயவெளிக்கு வரச்சொல்லுற..

கதிரறுக்கும் என்னையும் நீ....கட்டிபுடிச்சி அணைச்சிடுவ..

வேணாம்..வேணாம் என்மாமா..இந்த வேகம்.. கூடாது..

நானுஞ்சமஞ்சு நாளாச்சு....தாவணி போயி நேற்று முதல்..

புடவை கட்டும் பெண்ணாச்சு...

எப்ப மாமா வரப்போற?எப்ப... "பரிசப் பொடவ" தரப்போற?

தாலி ஒண்ணு தந்திட்டா..தட்டு வேணோ ஒம்பேச்ச..?

சீக்கிரமா வா மாமா..மண மாலை ஒண்ணு.. தா மாமா..

மாலையோடு தாலியுமே.. மாமா நீயும் தந்திட்டால்..

உன்... மடியினிலே விழிந்திடுவேன்...மரிக்கொழுந்தாய்..

மணத்திடுவேன்...உன் மயக்கத்தையே தீர்த்திடுவேன்....

வா..மாமா... வா..மாமா காதலோடு ஒனக்காக...

காத்திருக்கேன் வா மாமா...

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.