ட்வீட்..ட்வீட்..ட்வீட்..ட்வீட்... - தங்கமணி சுவாமினாதன்
அது ஒரு மழைக்கால்..மாலை நேரம்..
திறந்திருந்த ஜன்னலோரம்...
நின்றிருந்தேன் சிறிது நேரம்..
வானில்... திட்டுத் திட்டாய் கருத்த மேகம்..
ஊடே வானவில்லின் வர்ண ஜாலம்..
என் விழிகள் விரிந்து நெஞ்சம் நிறைந்தது..
அழகு அழகு இயற்கையின் அழ்கு..
ட்வீட்..ட்வீட்..ட்வீட்..ட்வீட்...
பத்துக்கும் மேலான சிட்டுக் குருவிகள்...
பாடிப் பறந்தன.... பறந்து திரிந்தன..
கொத்துக் கொத்தாய்க் கண்ணாடிச் சில்லுகள்
குத்தி நிற்கும் குட்டிச் சுவற்றில்..
குதித்துக் குதித்துத் தாவித் தாவி லாவகமாக
நடந்து பார்த்தன..மேலே பறந்து கீழே இறங்கி..
கீழே இறங்கி... மேலே பறந்து...செடிகளின் இலை மேல்
ஏறியமர்ந்து ஊஞ்சல் ஆடின.....சில விடலைப்
பறவைகள் அலகோடு அலகு சேர்த்து காதல் செய்தன..
குட்டிப் பறவையின் இறகு கோதி சில..
தாய்ப் பறவைகள் பாசம் காட்டின..
சிறகு வெளுத்த மூத்த பறவைகள்... "சிவனே" என்று..
அமைதி காத்து.... அமர்ந்திருந்தன..
ட்வீட்..ட்வீட்..ட்வீட்..ட்வீட்...கத்தும்போது குட்டி வாலை
மேலும் கீழும் ஆட்டி ஆட்டி..அற்புதம் செய்தன...
அடடா.. அடடா பார்க்கப் பார்க்க பரவசம் ஆனேன்..
விழிகளை... மூடித்திறக்கவும் மறந்தே போனேன்..
பட் பட்.. பட்பட்.. பட் பட்.. பட்பட்..
தட் தட்.. தட் தட்.. தட் தட்.. தட்தட்..
சட சட.. சட சட.. சட சட.. சட சட..
சத்தமெழுப்பி விழுந்தது தூறல்...
ட்வீட்..ட்வீட்..ட்வீட்..ட்வீட்..ட்வீட்..ட்வீட்..ட்வீட்..ட்வீட்..
கத்திக்கொண்டே கூடுகள் நோக்கிச் சடுதியில் பறந்தன
குருவிகள் மறைந்தன...
கெடுத்தது மழையெனச் செல்லமாய்த் திட்டி..
ஜன்னலின்... கதவை... மெள்ளச் சாத்தினேன்..
வெறுமையாகினேன்...தனிமையாகினேன்...
{kunena_discuss:779}