சுதந்திர தினம்....(எங்கே போகிறது இந்தியா?) - தங்கமணி சுவாமினாதன்
ஆகஸ்ட் பதினைந்து..இன்று சுதந்திர தினம்..
தாயின் மணிக்கொடியைத் தலைதாழ்த்திக்..
கரங்கூப்பி வணங்குவோம் வாரீர்....
சும்மாக் கிடைத்தத்தா சுதந்திரம்?
ஆயிரமாயிரம்பேர் அடிபட்டும், உதைபட்டும்..
சிறைபட்டும்,உடல் சிதைக்கப்பட்டும்-தம்
இன்னுயிரை ஈந்துமல்லவோ கிடைத்தது சுதந்திரம்.
அன்னிய நாட்டினன் நம்மை அடிமைப்படுத்தியும்..
சிறுமைப்படுத்தியும் பல நூறு ஆண்டுகள்-நம்
சொந்த நாட்டிலேயே நம்மை கொத்தடிமைகளாக
நாயினும் கேவலமாய் நடத்திவந்தாரன்றோ?
காந்தியும், நேதாஜியும்,பாரதியும் ,வாஞ்சினாதனும்..
கொடிகாத்தகுமரனும்,ஜான்சி ராணியும் இன்ன பிற
போராட்ட வீரர்கள், வீராங்கனைகள் வாங்கித்தந்த விடுதலை இது..
இன்றைய சுதந்திர இந்தியா எப்படி இருக்கிறது?
சத்தியமாய்ச் சொல்லுங்கள்..மனதைவிட்டுச் சொல்லுங்கள்..
நிஜத்தைச் சொல்லுங்கள்..நேர்மையாய்ச் சொல்லுங்கள்..
அன்னியன் ஆண்டபோது அவன் அள்ளிச் சென்றான் பாதி வளம்..
இன்றைய இந்தியாவின் மீதி வளம் எங்கே போயிற்று?..
மண் திருட்டு,கனிமத் திருட்டு,மரத்தில் திருட்டு,அறத்தில் திருட்டு..
பணத்திருட்டு,அரசாங்க இடங்கள் திருட்டு,கரித் திருட்டு,
காற்றில் தவழும் ஒலி அலைத் திருட்டு...இன்னும் என்னென்னவோ..?
ஜாதிக்கலவரம்,மதக்கலவரம்,மொழிப் போர்,மொழி எதிர்ப்பு...
மது விலக்கு,தீண்டாமை என ஆதாயம் கருதி அரசியல் பேசுவோர்..
ஆளாளுக்கு மக்களைப் பிரிப்பது மட்டுமல்ல..மாணவ சமுதாயத்தையும்
குட்டிச்சுவராக்கும் கொடுமையைக் காண நம் கண்கள் செய்த பாபம் என்ன?
வருடத்தில் ஒரு நாள் மூவர்ணக் கொடியேற்றம்... ஆரஞ்சு மிட்டாய்..
தப்பும் தவறுமாய் "ஜன கண மன'முடிந்தது சுதந்திர தினம்..
எங்கே போகிறது நம் நாடு?..புரியவில்லை எனக்கு..புரிகிறதா உமக்கு?
இவ்வருட சுதந்திரதினம் கலாமில்லா சுதந்திரதினம்...
கள்ளமில்லா கலாமில்லாமல் கொடிக்கு சலாம் வைக்க கஷ்டப்படுமோ மனசு?
எது எப்படியோ..சில்சீ குடும்பத்தினர் நாம் அனைவரும் ஒன்றாய்ச் சேர்ந்து..
வைப்போம் வணக்கம் நம் கொடிக்கு...சொல்வோம்...பலமாய்..
வந்தே மாதரம்..வந்தே மாதரம்..வந்தே மாதரம்.......
அன்பு சில்சீயின் ஆயிரமாயிரம் வாசக அன்பு நெஞ்சங்களுக்கு எனது இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்.....
{kunena_discuss:779}