என்ன பால்? - தங்கமணி சுவாமினாதன்
அருட்பால்,பொருட்பால்,காமத்துப்பால்..
இம் முப்பாலில் எப்பாலும் இதற்கு..
ஈடில்லை..
ஆண்பாலோ,பெண்பாலோ,மாற்றுப் பாலோ..
எப்பாலரும் பிறந்தவுடன் இப்பாலின்றி..
முழுதாய் மூன்று நாள் உயிர்தாங்க முடியாது..
இது பொய்ப்பாலில்லை மெய்ப்பால்..
ஆம் இது.... பெண்ணின் மெய்ப்பால்..
ஆண்டவனுக்கும் கிடைக்காத இப்பால்..
ஆவின் பாலோ,ஆரோக்யா பாலோ..
இன்ன பிற பாக்கெட் பாலோ அல்ல..
இது ஆரோக்கியமான பால்..அமுதான பால்..
அழும் குழந்தையும் அருந்திச் சிரிக்கும்
அற்புதமான பால்..
கலப்படமில்லா சுத்தப் பால் இதன்..
ஆரம்பப் பால் "சீயம் பால்"
இப்பால் தரும் பாதுகாப்பை..
எப்பாலும் தருவதில்லை..
ஞானப்பாலைக் காட்டிலும்..ஞாலம்
முழுதும் அது மனிதனோ,மிருகமோ..
உயிர் வாழ வைக்கும் அதிசயப் பால்..
தாய்க்கும் சேய்க்குமான பாசத்தை..
வஜ்ரத்தைக் காட்டிலும் வலிமையாய்
உறுதியாக்கும் பால்..
குழந்தையின் முதல் உயித் துளியான பால்..
அது அனைத்திற்கும் அப்பாற்பட்ட..
புனிதமான "தாய்ப் பாலே"
மகவு ஈன்றிருக்கும் தாய்மாரே..
இப்பாலை உங்கள் சேய்க்குத் தர..
மறந்தும் மறுத்து விடாதீர்...
ஆகஸ்ட் முதல் வாரம் தாய்ப்பால் வாரம் என்பதால் இக் கவிதையை(?) எழுதியுள்ளேன்
{kunena_discuss:779}