(Reading time: 1 - 2 minutes)

விக்ன வினாயகா போற்றி..போற்றி... - தங்கமணி சுவாமினாதன்

Mahaganapathy

சங்கரன் புதல்வனே....சக்தியின் மைந்தனே

ஐங்கரனே..ஆனை முகத்தோனே...

தும்பிக்கையான் உன் மீது ..நம்பிக்கை கொண்டே..

அருகம் புல் வைத்து..வெள்ளெருக்கு மாலை சூட்டி..

பாலும்,தெளிதேனும், பாகும்,பருப்புமுமோடு..

அப்பமும்,அவல் பொரியும்,செங்கரும்பும்,மோதகமும்..

பாங்காய்  படைத்துன்னை பக்தியோடு பணிந்திட்டால்..

அகமகிழ்ந்து போயிடுவாய் ஐஸ்வர்யம் தந்திடுவாய்..

துன்பத்தைப் போக்கிடுவாய் துணை நின்றே காத்திடுவாய்..

முன் வினைகள் தீர்த்திடுவாய்..முத்தமிழும் அளித்திடுவாய்..

அரணாக நீ நின்று அகிலத்தைக் காத்திடுவாய்...

அமைதியைத் தந்திடுவாய்...அறவழியைக் காட்டிடுவாய்....

விக்ன வினாயகா போற்றி..போற்றி...வேழ முகத்தோனே போற்றி..போற்றி.. 

அனைவருக்கும் நெஞ்சார்ந்த வினாயக சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.