நிம்மதி! - அமீர்
தங்கத் தாரகைகளோடு
தன்னந்தனி நிலவு
கன்னங்கரு இரவு.
யாருக்கும்
காதலின் நினைவு வரும்
எனக்கு மட்டும்
காந்தியின் நினைவு வருகிறது.
நள்ளிரவில்
ஒரு பெண்
தங்கநகைகளோடு
தனியாய் நடந்து சென்றால்
அதுவே சுதந்திரம் என்றார்.
இதோ
இந்த நடுநிசியில்
தங்கத் தாரகையோடு
தனியாய் செல்லும்
நிலாபெண்ணை பார்த்தால்
எத்தனை நிம்மதியடைவார்.