(Reading time: 1 - 2 minutes)

மரம் தேடி... - அமீர்

இதோ வந்துவிட்டாள் 
என் காதலி
காத்திருந்த நேரம் கைகூடியது...

அடிமன அபிலாஷை முதல்
அந்தரங்க சில்மிஷம் வரை
பரிவர்த்தனை   செய்ய...

அவள் நகம்தொட்டு
அதன் மூலம்
அகம் தொட்டு
என் காதலின் புறம்காட்ட...

அவளின் 
காதோர முடியை ஊதிவிட்டு
உதிர்ந்துவிழும்
தலையின் பூவை
யாருமறியாமல் எடுத்து முகர...

செல்லப்பெயரிட்ட
சித்திரவதன அடையாளங்களுடன்
என் தோள்மீது
தலைசாய்க்க துடிக்கும்
அவளின்   கழுத்து...

எங்கள் தலைமீது
தகிக்கும் தனலை
முழுக்க மறைக்க முயலும்
அவளின் தாவணி...

கலைந்திருக்கும்
என் தலைமுடியை
கோதிவிட  துடிக்கும்
அவளின் கைகள்...

யாவுமாக சேர்ந்து
தேடுகிறோம்
ஒரு மரத்தடியை
அங்கே மனம்விட்டு பேசி
எங்கள் காதல் வளர்க்க...

ஆனால்
எங்கும் தென்படவில்லை
உங்கள் பக்கம்
ஏதும் மரம் இருந்தால்
சொல்லுங்களேன்
அங்கே வருகிறோம்!

இது காதல் கவிதை அல்ல. பூமி வெப்பமாவதலை தடுக்க  மரங்கள் வளர்க்கப்பட வேண்டும் எனும் கருத்துக்காக எழுதப்பட்ட கவிதை.

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.