(Reading time: 1 - 2 minutes)

உனக்கு தெரியுமா !! - கீர்த்தனா.ஆர்

உயிரற்ற காகிதம் நீ 

உலகமே உன்னை தேடித் தான்

ஓடிக் கொண்டு இருக்கிறதென்று 

உனக்கு தெரியுமா??

உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பேதமுமில்லை!!

உணர்சிகள் உள்ளம் என்ற காரணமுமில்லை!!

உயர்ந்த பண்புள்ள மனிதனை விடவும் 

உலகின் அனைத்து இடங்களிலும் நீ தான் முதலிடமென்று 

உனக்கு தெரியுமா ??

இன்பத்திலும் துன்பத்திலும் உன்னையே 

அதிகம் நாடுகின்றனர்!!

உனக்கே முதலிடம் அளிக்கின்றனர்!!

உத்தமனுக்கு இருக்கும் மதிப்பை விட 

உனக்கு தான் அதிக மதிப்பென்று

உனக்கு தெரியுமா ??

உயிருள்ள சிசு ஜனிப்பது முதல் 

உயிரற்ற உடல் தகனம் செய்யும் வரை 

உலகில் உனக்கே முதலிடமென்று 

உனக்கு தெரியுமா ??

ஊடகங்களிலும் உனக்கே முதலிடம் 

உள்ளம் உருகுலைந்து நின்ற போதும் 

உற்றார் உறவினரை விடவும்  

ஊர் உலகெங்கும் உனக்கே முதலிடமென்று 

உனக்கு தெரியுமா ??

இந்த கவிதை வரிகளுக்கு

நீயே காரணம் என்று  உனக்கு தெரியுமா?? 

ஹாய் friends!! இன்றைய காலகட்டத்தில்  எல்லா இடங்களிலும் பணம் தான் முக்கியமாக உள்ளது. நாம் அனைவரும் நிறைய அனுபவங்களை நேரில் தினம் தினம் சந்திக்கிறோம். "பணம் பந்தியிலே குணம் குப்பையிலே" என்று நம் முன்னோர்கள் சொன்ன பழமொழி உண்மை தான். நான் பார்த்த அனுபவங்களை வைத்து இந்த வரிகளை எழுதி உள்ளேன். படிச்சிட்டு உங்க அனுபவங்களை சொல்லுங்கள் நண்பர்களே!!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.