என் அன்பு மகளுக்கு - சரண்யா நடராஜன்
என்னில் உதித்த என் நிலாவே..
தாய்மை என்னும் வரத்தை எனக்கு
கொடுத்த என் தேவதையே..
என் வாழ்க்கையில் மகிழ்ச்சியை மட்டும் அள்ளிக் கொடுக்க
வந்த என் செல்லமே..
உன் முதல் ஸ்பரிசத்தில் இந்த உலகையே மறந்தேன்..
உன்னை கையில் ஏந்திய அந்த முதல் நொடி
ரோஜா குவியலை தூக்கியது போல உணர்ந்தேன்..
உன் பொக்கை வாய் சிரிப்பில் நான்
என்னையே தொலைத்தேன்..
நீ சிரிக்கும் போது நானும் சிரித்து
நீ அழும் போது நானும் அழுது
உன்னோடு நானும் ஒரு
குழந்தையாகி போனேன்..
உறக்கத்தில் நீ சிரிக்கும் அழகை காண
நான் உறங்காமல் விழித்திருக்கிறேன்..
எத்தனை மொழிகள் இருந்தாலும்
உன்னுடைய மழலை பேச்சுக்கு ஈடாக
ஏதும் உண்டோ இவ்வுலகில்..
தோல்வியையே அறியாத நான்
உன்னுடன் விளையாடி தோற்கும்
ஒவ்வொரு முறையும் இது வரை
இல்லாத மகிழ்ச்சியையே அடைகிறேன்..
அம்மா என்ற உன் முதல் அழைப்பில்
இந்த உலகையே வென்றுவிட்ட
பெருமை கொள்கிறேன்..
தத்தி தத்தி நீ நடந்து வரும் உன் அழகில்
நான் சிலையாகிறேன்..
கொஞ்சி கொஞ்சி நீ கதை சொல்லும் உன் பாவனையில்
உனக்கு மாணவியாகிறேன்..
உன் ஒவ்வொரு அசைவிலும் என் அம்மாவே
எனக்கு மகளாக பிறந்ததைக் கண்டு
ஆனந்தத்தில் ஊமையாகி போகிறேன்..
ஹாய் ப்ரண்ட்ஸ்.....
இது என் (சகோதரியின்) குழந்தையின் அன்பில் நான் நனைந்து எழுதியது... ஏதேனும் குற்றம், குறை இருப்பின் மன்னிக்கவும்..
{kunena_discuss:779}